aa

aa

  

ஊடகவியலாளர் சந்திப்பு – 2013 இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி, மாதம்பை, இலங்கை. இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா மற்றும் 25ஆவது பூர்த்தி விழாவினை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று வெற்றி கரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். திகதி : 08-01-2013 (செவ்வாய்கிழமை) நேரம் : மாலை 06 : 30 மணி இடம் : தாருல் கேட்போர் கூடம், 77 தெமடகொட, கொழும்பு. ஏற்பாடு : பழைய மாணவர் சங்கம், இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி. வெள்ளி விழாக் காணும் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலிருந்தே முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகின்றது. வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்கள் இலங்கை மன்னர்களின் வைத்தியர்களாக, சர்வதேச விவகாரங்களில் ஆலோசகர்களாக, நன்மதிப்பைப் பெற்ற வர்த்தகர்களாக விளங்கினர். எனினும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடர்ந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியினர் முஸ்லிம்களை வர்த்தகத்திலும் மார்க்கத்திலும் தமது போட்டியாளர்களாகக் கருதி அவர்களை ஒடுக்கினர். இதனால் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பின்னடையத் தொடங்கினர். இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் தமது சமய நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் பேணி வந்துள்ளனர். காலத்துக்குக் காலம் நமது நாட்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் அதில் பங்களிப்புச் செய்து வந்துள்ளன. அந்த வகையில் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட ஹிஸ்புல் இஸ்லாம் அறக்கட்டளையால்; இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி 1987ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அன்று முதல் சமகால உலகுக்குப் பங்களிப்பு வழங்கக்கூடிய இஸ்லாமிய அறிஞர்களை (ஆலிம்களை) உருவாக்குதல், அவர்களது தொடரான வளவிருத்திக்கு வழிசெய்தல்... பல்வேறு துறைசார் மக்களையும் அறிவூட்டி வழிகாட்டுவதன் ஊடாக அவர்கள் இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றி வாழவும் மனித சமூகத்தின் நலனில் பங்காற்றவும் வழிசெய்தல்... அறிவுப் பாதையில் பயணிப்பவர்களுக்குத் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்... அறிவின் பரம்பலுக்காக ஊடகத்துறையைப் பயன்படுத்தல்... ஆகிய பிரதான இலக்குகளின் அடிப்படையில் எமது கல்லூரி செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரி தலைநகர் கொழும்பிலிருந்த 65 மஅ தூரத்தில் மாதம்பை நகரத்தில் அமைந்துள்ளதுடன் தன்னகத்தே வகுப்பறைகள், வாசிகசாலை, கேட்போர்கூடம், மாணவர் விடுதி, ஆசிரியர் விடுதி, பள்ளிவாசல் என்பவற்றையும் கொண்டுள்ளது. இதுவரை இஸ்லாஹிய்யாவிலிருந்து 186 பேர் 6 வருட கற்கை நெறியினை வெற்றிகர மாகப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களில் பலர் சூடான், இங்கிலாந்து, பாகிஸ்தான், யமன், ஜோர்தான் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வியைப் பெற்றுள்ளனர். இஸ்லாமிய சட்டவியலின் அடிப்படைகள் (உஸ_லுல் பிக்ஹ்) இஸ்லாமிய வங்கியியல், வணிக முகாமை, சமூகப் பணி, சர்வதேச உறவு, இஸ்லாமிய கலாசாரம் போன்ற துறைகளில் இஸலாஹிய்யா பட்டதாரிகளில் பலர் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளனர். யெமன், சஊதி அரேபியா, எகிப்து, சூடான் போன்ற நாடுகளிலுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இப்போதும் இஸ்லாஹிய்யா பட்டதாரிகள் உயர்க்கல்வியை கற்று வருகின்றனர். இஸ்லாஹிய்யா பட்டதாரிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சமூக சீர்திருத்தம், சமூக மேம்பாடு மற்றும் நாட்டின் அபிவிருத்திற்குப் பங்களிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இஸ்லாஹிய்யாவின் கலைத் திட்டத்தைப் பொறுத்த வரையில் ஆரம்ப கட்ட டிப்ளோமா 3 வருடங்களைக் கொண்டது. இப்பாடநெறிக்கு க.பொ.த.(சா.த)பரீட்சையை வெற்றிகரமாகப் ப+ர்த்தி செய்த 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சேர்த்தக் கொள்ளப் படுகிறார்கள். இதில் மாணவர்களுக்கு அரபு, இஸ்லாமிய கற்கைகளின் அடிப்படைகள் கற்பிக்கப்படுவதோடு; கலை, வர்த்தகத் துறைகளில் க.பொ.த.(உ.த) பரீட்சைக்கும் தோற்றுகின்றனர். இதன் மூலம் சிறந்த இஸ்லாமிய அறிவும் இஸ்லாத்தின் மூலாதாரங்களை அதன் மூலமொழியில் விளங்கும் ஆற்றல்மிக்க இளைஞர்களை உருவாக்குவதையும் கல்லூரி நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பயிற்சியை முடிப்பவர்கள் ஏனைய பல்கலைக்கலகங்களில் இணைந்து பல்வேறு கற்கைத்துறைகளில் பயிலவும் முடியும் டிப்ளோமா பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஷரீஆ துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் இஸ்லாஹிய்யாவின். 4 வருட இஸ்லாமியக் கற்கைக்கான பாடநெறிக்கு அனுமதி பெற முடியும். இதில் மாணவர்கள் அல்குர்ஆனின் கலைகள். ஹதீஸ் கலை, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய சட்டங்கள், அதன் அடிப்படைகள், இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள் போன்ற பாடங்களையும் அரபு மொழி, அரபு இலக்கணம் மற்றும் ஆங்கிலம், கணினி, முகாமைத்துவம் போன்ற பாடங்களையும் கற்பதோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டப் பரீட்சைக்கும் தயார் செய்யப்படுகிறார்கள். இஸ்லாஹிய்யாவின் இணைப் பாடத்திட்ட செயற்பாடுகள் ஊடாக மாணவர்களில் ஆளுமை, பண்பாட்டு விருத்தி, எழுத்து, பேச்சு தலைமைத்துவ ஆற்றல்களை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் வாசிகசாலை இலங்கையிலுள்ள இஸ்லாமிய வாசிகசாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்;. இஸ்லாஹிய்யாவிலன் துணை நிறுவனமான IIIT இஸ்லாஹிய்யா மாணவர்களைத் தகவல் தொழிநுட்பத் துறையில் பயிற்றுவிப்பதோடு இதுவரை சுமார் 3000 வெளி இளைஞர்களையும் யுவதிகளையும் இத்துறையில் பயிற்றுவித்துள்ளது. எதிர்காலத்தில் இஸ்லாமியக் கற்கைக்கான பல்வேறு வசதிகளையும் கொண்ட சர்வதேச தரத்திலான ஓர் உயர்கல்வி நிறுவனமாக வளர்ச்சியடைவதே இஸ்லாஹிய்யாவின் நோக்காகும். அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க அது திட்டமிட்டு செயற்பட்டுவருகிறது. பழைய மாணவர் அமைப்பு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி 08.01.2013 இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாதம்பை - இலங்கை. 1) இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழா நான்காம் பட்டமளிப்பு காலம் : ஜனவரி 14 திகதி திங்கட்கிழமை, 2013 நேரம் : காலை 10:00 மணி முதல் நன்பகல் 12:00மணி வரை நடைபெறும் இடம் : மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம் 2) 25ஆவது ஆண்டு வெள்ளி விழா 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாஹிய்யா 2012 ஆம் ஆண்டுடன் 25வருடத்தை பூர்த்தி செய்கின்றது. காலம் : 2013 ஜனவரி மாதம் 15ஆம் திகதி புதன்கிழமை நேரம் : மாலை 06:45 மணி முதல் நடைபெறும் இடம் : கொழும்பு 03 இல் அமைந்துள்ள மேமன் மண்டபம் வெள்ளி விழா நிகழ்வுகளின் பிரதான அம்;சங்கள் ஐ. கல்லூரியின் புதிய இலட்சினை (டுழபழ) அறிமுகம். ஐஐ. உத்தியோக பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் ஐஐஐ. நினைவு மலர் வெளியீடு ஐஏ. இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையத்தின் 10 புத்தகங்கள் வெளியீடு 3) ஆய்வு மாநாடு இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி; பேராதெனிய பல்கலைக்கழத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. காலம் : 2013 மார்ச் மாதம் 02ஆம் திகதி சனிக்;கிழமை சர்வதேச மாணவர்களும் எதிர் பார்க்கப்படுகின்றனர். 4) பிராந்திய நிகழ்சிகள் கல்லூரியின் வெள்ளி விழாவினை முன்னிட்டு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பிரத்தியேகமான நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 

Advertisement

0 comments:

Post a Comment

 
Top