aa

aa


ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காலி, உனவட்டுன எனுமிடத்தில் வீதியை விட்டு விலகி, கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை 05.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Advertisement

0 comments:

Post a Comment

 
Top