aa

aa

நேபாளத்தில் அண்மையில்  ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கதால் பலியாகினர். மேலும், நாடு முழுவதும் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை  இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும் ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட்கிளப் அணிக்காக விளையாடி வரும் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரோனால்டா நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த தொகையை சர்வதேச தொண்டு அறக்கட்டளையான ” குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற அமைப்பு மூலம் வழங்கியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது. 

நேபாளத்துக்கு 50 கோடி நிவாரண உதவி தொகையாக வழங்கியதை, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ள ரோனால்டா, ரசிகர்களும் உதவ முன் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement

0 comments:

Post a Comment

 
Top