மும்பை: கார் விபத்து வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்துள்ளது. விபத்தின் போது சல்மான்கான் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள நீதிபதி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான்,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்னர் விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் மற்றும் சல்மான்கானின் பக்கத்து வீட்டுக்காரர் பிரான்சிஸ் பெர்னான்டஸ் மற்றும் சல்மான்கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் உள்ளிட்ட பலர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
சல்மான் கான் குற்றவாளி... 13 ஆண்டு கால கார் விபத்து வழக்கில் தீர்ப்பு!
மும்பை: கார் விபத்து வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்துள்ளது. விபத்தின் போது சல்மான்கான் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள நீதிபதி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான்,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்னர் விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் மற்றும் சல்மான்கானின் பக்கத்து வீட்டுக்காரர் பிரான்சிஸ் பெர்னான்டஸ் மற்றும் சல்மான்கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் உள்ளிட்ட பலர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
0 comments:
Post a Comment