சாதாரணமாக பாலங்களின் வடிவமைப்பு வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் விதத்தில் அமைக்கப்படுவதுண்டு. ஆனால், அந்த இடத்தின் நில அமைப்பு, கட்டடங்கள் போன்றவற்றை கருதி, வளைவு நெளிவுகளுடன் மாற்றி அமைக்கின்றனர். இந்தநிலையில், ஜப்பானில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பாலம் தினசரி, அதில் செல்லும் வாகன ஓட்டிகளை அடி வயிறு கலங்க வைக்கிறது. அந்தளவு இந்த பாலத்தை சரிவாக அமைத்துள்ளனர். திருவாரூரில் இருக்கும் ஒரு ரயில்வே மேம்பாலத்தை மரண பாலம் என்று கூறுவதுண்டு. அதுபோன்று, இந்த பாலமும் வாகன ஓட்டிகளை கதிகலங்க வைக்கிறது. ஸ்லைடரில் வந்து பாருங்கள், அடி வயிறு கலங்குவது உறுதி...

பெரிய பாலம் உலகின் மூன்றாவது பெரிய பாலமாக இதனை குறிப்பிடுகின்றனர். 1.7 கிமீ நீளமுடைய இந்த இந்த பாலம் 11.4 மீட்டர் அகலம் கொண்டது. முழுவதும் கான்க்ரீட் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.
உயரம் ஏன்? இந்த பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு வசதியாக இந்த அளவு செங்குத்தாக கட்டியுள்ளனராம்.
0 comments:
Post a Comment