இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மரண தண்டனை குற்றவாளிகளின் தண்டனை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்த 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்று பாகிஸ்தானில் குழந்தை கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
அப்துல் ஹபோர் என்ற குற்றவாளி கடந்த 1991 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் மரண தண்டனை விதிக்கபட்டு விகாரி மாவட்ட சிறையில் அடைக்கபட்டு இருந்தான். அப்துல் கபாரின் கருணை மனுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் நிராகரித்ததை தொடர்ந்து அப்துல் இன்று காலை தூக்கிலிடபட்டான்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மரண தண்டனை குற்றவாளிகளின் தண்டனை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்த 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்று பாகிஸ்தானில் குழந்தை கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
அப்துல் ஹபோர் என்ற குற்றவாளி கடந்த 1991 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் மரண தண்டனை விதிக்கபட்டு விகாரி மாவட்ட சிறையில் அடைக்கபட்டு இருந்தான். அப்துல் கபாரின் கருணை மனுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் நிராகரித்ததை தொடர்ந்து அப்துல் இன்று காலை தூக்கிலிடபட்டான்.
0 comments:
Post a Comment