இலங்கையில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றதன் காரணமாக இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்தவர்கள் மற்றும் பிறநாட்டில் பிறந்து இலங்கைப் பிரஜாவுரிமையை பெறவிரும்பியவர்கள் என்ற இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று இலங்கை பிரஜையாக இந்நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கியதன் பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து இலங்கைப் பிரஜைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
0 comments:
Post a Comment